நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது என்பதை அவரே ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். நேற்று கூட பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை தொடர்ந்து தற்போது நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ட்வீட்ர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த ட்வீட்டில் நடிகர் மாதவன் தெரிவித்திருப்பது ” ரான்ச்சோவை ஃபர்ஹான் தொடர்ந்து சென்று தான் ஆக வேண்டும். வைரஸ் என்றுமே எங்களைத் துரத்தியிருக்கிறார். இந்த முறை அவர் எங்களைப் பிடித்து விட்டார், நான் நலமாக இருக்கிறேன். விரைவில் குணமடைந்துவிடுவேன் என்று நம்புகிறேன். உங்கள் அத்தனை அன்புக்கும் நன்றி. நான் நன்றாகத் தேறி வருகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டை 3 இடியட்ஸ் படத்தின் கதாபாத்திரங்களை முன்வைத்து மாதவன் வெளியிட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…