நடிகை மீரா மிதுன் பிரபலமான இந்திய நடிகையும், மாடல் அழகியுமாவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இவர் பல சர்ச்சைகளில் சிக்கி, இவர் மீது ஏற்கனவே பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் இவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘மும்பையில் பாதுகாப்பாக உணர்வதால் அங்கு வசிப்பதாகவும், தமிழகத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழக போலிஸாரையும் விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டல் அதிகாரி ஒருவர் இவர் போலீசாரை விமர்சித்து பேசிய பேட்டி குறித்து கேட்டுள்ளார். இதனையடுத்து, நடிகை மீரா மிதுன் ஹோட்டல் அதிகாரி அருணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, இவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…