பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் நஜிபுல்லா அலிகிலின் மகள் சில்சிலா அலிகில் கடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே விடுவிக்கப்பட்டார் எனவும் விடுவிக்கப்பதற்கு முன்பு கொடூரமாக தாக்கப்பட்டார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபாகன் தூதர் நஜிபுல்லா அலிகிலின் மகள் சில்சிலா அலிகில் நேற்று மாலை இஸ்லாமாபாத்தில் உள்ள தெஹ்ஸீப் பேக்கரி அருகே காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இதுவரை கடத்தப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர்.
நேற்று மதியம் 1.30 மணியளவில் ஜின்னா சந்தை அருகே சில்சிலா அலிகில் கடத்தப்பட்டு இரவு 7 மணியளவில் காயமடைந்த நிலையில் விடுவிக்கப்பட்டார். இதன் பின்னர் சில்சிலா அலிகில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு வழக்குத் தொடருமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…
டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…