ஆப்கானிஸ்தானில் 14-16 வயது மதிக்கதக்க சிறுமி ஒருவர், தனது பெற்றோர்களை கொலை செய்த இரண்டு தலிபான் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள குமர் குல் என்ற சிறுமி, தனது பெற்றோர்களுடன் கிரிவா கிராமத்தில் வசித்து வந்தார். அவளின் தந்தை, அரசாங்க ஆதரவாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, கடந்த வாரம் கிரிவா கிராமத்தில் உள்ள அந்த சிறுமியின் வீட்டிற்குள் தாலிபன் தீவிரவாதிகள் நுழைந்து, அவரின் பெற்றோர்களை சுட்டுக்கொன்றனர். தனது பெற்றோர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்த சிறுமி, தனது குடும்பத்தின் ஏ.கே .47 துப்பாக்கியை எடுத்து அந்த தீவிரவாதிகளை சுட்டார்.
இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அதில் பல தீவிரவாதிகள் காயமடைந்ததாக கோர் மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த சிறுமி, 14 முதல் 16 வயதுக்குட்பட்டவர் எனவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பின், பயங்கரவாதிகள் குமர் குலின் வீட்டைத் தாக்க வந்தனர், ஆனால் உள்ளூர் மக்கள் மற்றும் அரசு ஆயுத குழுவால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதன்காரணமாக, அந்த சிறுமியும், அவரின் தம்பியையும் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
மேலும், தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அந்த சிறுமியின் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அந்த சிறுமியின் செயல், மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறார்.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…