ஆப்கானிஸ்தானில் 14-16 வயது மதிக்கதக்க சிறுமி ஒருவர், தனது பெற்றோர்களை கொலை செய்த இரண்டு தலிபான் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள குமர் குல் என்ற சிறுமி, தனது பெற்றோர்களுடன் கிரிவா கிராமத்தில் வசித்து வந்தார். அவளின் தந்தை, அரசாங்க ஆதரவாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, கடந்த வாரம் கிரிவா கிராமத்தில் உள்ள அந்த சிறுமியின் வீட்டிற்குள் தாலிபன் தீவிரவாதிகள் நுழைந்து, அவரின் பெற்றோர்களை சுட்டுக்கொன்றனர். தனது பெற்றோர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்த சிறுமி, தனது குடும்பத்தின் ஏ.கே .47 துப்பாக்கியை எடுத்து அந்த தீவிரவாதிகளை சுட்டார்.
இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அதில் பல தீவிரவாதிகள் காயமடைந்ததாக கோர் மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த சிறுமி, 14 முதல் 16 வயதுக்குட்பட்டவர் எனவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பின், பயங்கரவாதிகள் குமர் குலின் வீட்டைத் தாக்க வந்தனர், ஆனால் உள்ளூர் மக்கள் மற்றும் அரசு ஆயுத குழுவால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதன்காரணமாக, அந்த சிறுமியும், அவரின் தம்பியையும் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
மேலும், தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அந்த சிறுமியின் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அந்த சிறுமியின் செயல், மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறார்.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…