ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்த ஆப்பிரிக்க பெண்மணி!

Published by
Rebekal

ஆப்பிரிக்காவிலுள்ள மாலி என்னும் நாட்டில் உள்ள பெண்மணி ஒருவர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பிரசவித்துள்ளார். மேலும் இது மருத்துவர்கள் சொன்ன கணக்கில் இருந்து இரண்டு அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மாலி எனும் எனம் நாட்டில் பெண்மணி ஒருவர் மிக அதிசயமாக 9 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். 25 வயதுடைய ஹலீமா சிஸ்லின் எனும் பெண்மணி தான் கருவுற்றிருக்கும்போது மருத்துவமனை சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது மருத்துவர்கள் உங்கள் கருப்பையில் 7 குழந்தைகள் உள்ளது என கூறியுள்ளனர். இந்த பெண்மணி ஏழு குழந்தைகள் உள்ள கர்ப்பிணி என்பதற்காகவே பலராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்தப் பெண்மணிக்கு சிறப்பு கவனம் தேவை என்பதால் மருத்துவர்கள் மொரோக்காவில் உள்ள மருத்துவமனையில் சென்று மருத்துவம் பார்க்குமாறு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை அடுத்து இந்த பெண்மணிக்கு ஆபரேஷன் செய்து குழந்தைகளை வெளியே எடுத்துள்ளனர். இந்நிலையில் மருத்துவர்கள் ஸ்கேன் அடிப்படையில், 7 குழந்தைக்காக காத்திருந்து எடுக்கும் பொழுது ஏழு குழந்தைகள் இல்லை.  அந்த பெண்மணியின் கருப்பையினுள் 9 குழந்தை இருந்துள்ளது. ஐந்து பெண் குழந்தை மற்றும் நான்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய் மற்றும் குழந்தைகள் அனைவருமே நன்றாக இருப்பதாக மாலியின் சுகாதார அமைச்சர் ஃபாண்டா சிபி தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு 9 குழந்தைகளைப் பெற்றெடுப்பது அரிதிலும் அரிதான ஒன்று எனவும் அவ்வாறு பிறந்தாலும் பலரின் குழந்தைகள் உயிருடன் பிறப்பதில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தப் பெண்மணிக்கு பிறந்த குழந்தைகள் அனைத்தும் உயிருடன் இருப்பதாகவும், தாய் மற்றும் குழந்தைகள் 9 பேரும் நன்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

பாஜகவுடன் கூட்டணி ஏன்? இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

2 minutes ago
ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

1 hour ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

1 hour ago

வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அதிர்ச்சி.. 2-வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…

2 hours ago

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

10 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

11 hours ago