ஆப்பிரிக்காவிலுள்ள மாலி என்னும் நாட்டில் உள்ள பெண்மணி ஒருவர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பிரசவித்துள்ளார். மேலும் இது மருத்துவர்கள் சொன்ன கணக்கில் இருந்து இரண்டு அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மாலி எனும் எனம் நாட்டில் பெண்மணி ஒருவர் மிக அதிசயமாக 9 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். 25 வயதுடைய ஹலீமா சிஸ்லின் எனும் பெண்மணி தான் கருவுற்றிருக்கும்போது மருத்துவமனை சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது மருத்துவர்கள் உங்கள் கருப்பையில் 7 குழந்தைகள் உள்ளது என கூறியுள்ளனர். இந்த பெண்மணி ஏழு குழந்தைகள் உள்ள கர்ப்பிணி என்பதற்காகவே பலராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்தப் பெண்மணிக்கு சிறப்பு கவனம் தேவை என்பதால் மருத்துவர்கள் மொரோக்காவில் உள்ள மருத்துவமனையில் சென்று மருத்துவம் பார்க்குமாறு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை அடுத்து இந்த பெண்மணிக்கு ஆபரேஷன் செய்து குழந்தைகளை வெளியே எடுத்துள்ளனர். இந்நிலையில் மருத்துவர்கள் ஸ்கேன் அடிப்படையில், 7 குழந்தைக்காக காத்திருந்து எடுக்கும் பொழுது ஏழு குழந்தைகள் இல்லை. அந்த பெண்மணியின் கருப்பையினுள் 9 குழந்தை இருந்துள்ளது. ஐந்து பெண் குழந்தை மற்றும் நான்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய் மற்றும் குழந்தைகள் அனைவருமே நன்றாக இருப்பதாக மாலியின் சுகாதார அமைச்சர் ஃபாண்டா சிபி தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறு 9 குழந்தைகளைப் பெற்றெடுப்பது அரிதிலும் அரிதான ஒன்று எனவும் அவ்வாறு பிறந்தாலும் பலரின் குழந்தைகள் உயிருடன் பிறப்பதில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தப் பெண்மணிக்கு பிறந்த குழந்தைகள் அனைத்தும் உயிருடன் இருப்பதாகவும், தாய் மற்றும் குழந்தைகள் 9 பேரும் நன்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…