தனது காதலன் வீட்டின் அருகில் இருக்க வேண்டும் என்ற ஆசையால் ஏற்கனவே அப்பார்ட்மெண்ட் இருந்தாலும் தற்பொழுது ரன்பீர் இருக்கும் அப்பார்ட்மெண்டில் 32 கோடி செலவு செய்து அலியாபட் ஒரு இடத்தை வாங்கி உள்ளார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களாக வலம் வரக்கூடிய அலியாபட் மற்றும் ரன்வீர் கபூர் ஆகிய இருவருமே காதலர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஆலியா தனது சகோதரியுடன் மும்பையில் வசித்து வருகிறார். அங்கு 13 கோடி மதிப்பில் ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி வைத்துள்ளார். இந்நிலையில் அவரது காதலர் ரன்வீர் கபூர் அவர்கள் பாலி ஹில் பகுதியில் வாஸ்து என்ற சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாவது மாடியில் 2470 சதுர அடியில் ஒரு அப்பார்ட்மெண்டில் வாங்கி, இந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் ரன்பீர் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தனது காதலனுக்கு அருகில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ஆலியா தற்போது 32 கோடி செலவில் அந்த அப்பார்ட்மெண்டில் இடம் வாங்கி உள்ளதாகவும் தனது குடும்பத்தார், ரன்பீர் கபூர், இயக்குனர்கள் மற்றும் நண்பருடன் சேர்ந்து அண்மையில்தன் அவரது வீட்டில் பூஜை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்பொழுது வீட்டில் இன்டீரியர் ஒர்க் நடைபெறுவதாகவும் அதற்காக ஷாருக்கானின் மனைவியிடம் கேட்டு உள்ளதாகவும் விரைவில் வேலைகள் முடிந்ததும் தனது காதலனின் வீட்டு அருகிலேயே குடியேற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…