அமெரிக்காவில் கடந்த 32 ஆண்டுகளாக எந்த போர்வெல்லிலும் குழந்தை விழவில்லை! காரணம் இதுதானா?!

Published by
murugan

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தவறி விழுந்த சுஜித்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 4 நாட்களுக்கு மேலாக கடந்தும் போராடி வந்தனர்.80 மணி நேரமாக நடைபெற்ற போராட்ட முயற்சி தோல்வி அடைந்து சிறுவன் இறந்து விட்டான்.
அமெரிக்காவில் கடந்த 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் ஜெஸிகா என்ற ஒன்றரை வயது குழந்தை அவரது வீட்டின் பின்னாடி மூடப்படாமல் இருந்த 22 அடி ஆழ்துளை கிணற்றில் விளையாடி கொண்டிருக்கும் பொது தவறி விழுந்தது. இதனை அடுத்து அந்நாட்டின் மீட்புப்படைகள் 50 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த குழந்தையை உயிருடன் மீட்டனர்.

இந்த சம்பவத்தை அடுத்து அமெரிக்க அரசு அதிரடியாக அந்நாட்டில் மூடப்படாமல் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிட்ட பின்னர் பொதுமக்களும் இந்த விஷயத்தில் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து ஒரு சில நாட்களில் அமெரிக்காவில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளும் முறைப்படி மூடப்பட்டு அதனை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு சான்றிதழும் கொடுத்தனர். இதனை அடுத்து 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்று வரை ஒரு ஆழ்துளை கிணறு விபத்து கூட நடந்ததில்லை ஒரு உயிர் கூட இழக்கப்படவில்லை.

ஆழ்துளை கிணறுகளை மூடி வைக்க வேண்டும் என்ற அடிப்படை விழிப்புணர்வு இத்தனை உயிர்கள் பலியான பின்னரும் நமக்கு ஏற்படவில்லை. சுஜீத்தின் மறைவிற்குப் பின்னரும் இந்த விழிப்புணர்வு நமக்கு ஏற்படவில்லை என்றால் நம்முடைய பொருப்பின்மை உச்சகட்டத்தில் இருக்கிறது என்பதுதான் அர்த்தம்.

Published by
murugan

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

11 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

11 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

12 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

12 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

13 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

14 hours ago