தண்ணீர் வழியாக உடலில் நுழைந்து மூளையை தின்னும் அமீபா நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அமெரிக்காவில் உள்ள புளோரிடா சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நெக்லேரியா பவுலேரி என்ற மிக நுண்ணிய வகை அமீபா மூளையை தின்னும் ஒரு அரிய வகை என்றும், இது ஒரு செல் மட்டுமே உடையது என்றும் கூறுகின்றனர்.வழக்கமாக இந்த அமீபா குளிர்வில்லாத நன்னீரில் தான் காணப்படும் என்றும், மனிதர்களிடமிருந்து மனிதருக்கு பரவாது என்று தெரிவித்துள்ளனர். இந்த அமீபா மூளையில் தொற்றினை ஏற்படுத்தும் பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொற்றால் கடந்த 2009 மற்றும் 2018 உள்ளிட்ட காலங்களில் 34 பேர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 30பேருக்கு பொழுதுபோக்கு நீர்நிலைகளில் இருந்து பரவியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த தொற்று பெரும்பாலும் அமெரிக்காவின் தென் பகுதியில் தான் நிகழும் என்றும், 1962ல் புளோரிடாவில் 36 பேர் அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ஹில்ஸ்பாரோ கவுன்டியில் ஒருவர் இந்த மூளையை தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் ஏரியில் நீந்தும் போது மூக்கு வழியாக இந்ந அமீபா நுழைந்துள்ளதாக கூறியுள்ளனர். இது குறித்து அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் ஹில்ஸ்பாரோ கவுன்டியில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது குழாய் தண்ணீர் உட்பட வேறு எந்த வகை தண்ணீராக இருந்தாலும் மூக்கில் படாமல் குடிக்க ஜூலை 3 தேதி அறிவுறுத்தியுள்ளனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…