குட்நியூஸ்..!உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸை 99.9 சதவிகிதம் அழிக்கும் சிகிச்சை-ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடிப்பு….!

Published by
Edison

உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸை 99.9 சதவிகிதம் அழிக்கும் அரிய சிகிச்சை முறையை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்திலுள்ள கிரிஃப்த் (Griffith University) பல்கலைக்கழகத்தில்,சர்வதேச அறிவியலாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது.இதனால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.இதன்காரணமாக,கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு கட்டமாக, தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,கொரோனா வைரஸை 99.9 சதவிகிதம் அழிக்கும் அரிய சிகிச்சை முறை ஒன்றை,ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்திலுள்ள கிரிஃப்த் (Griffith University) பல்கலைக்கழகத்தில்,சர்வதேச அறிவியலாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.

இது குறித்து,ஆய்வின் தலைமை பேராசிரியர் நிகெல் மெக்மில்லன் கூறியதாவது,”1990களில் முதன்முதலாக ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஜெனீ சைலன்சிங்’ (gene-silencing) என்ற மருத்துவ தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு,கொரோனாவைத் தாக்க ஆர்என்ஏ என்னும் மரபுப்பொருளை பயன்படுத்தி இந்த சிகிச்சை முறையை உருவாக்கியுள்ளோம்.

அதன்படி,இந்த ஆர்என்ஏ மருந்தை மிக நுண்ணிய துகள்களான ‘நானோ பார்டிகில்ஸ்’ என்னும் துகள்களாக மாற்றி கொரோனா நோயாளியின் உடலுக்குள்,அதாவது இரத்தக்குழாய்களுக்குள் ஊசி மூலம் செலுத்தவேண்டும்.

அதன்பின்னர்,இந்த ஆர்என்ஏ வின் சிறு துகள்கள் ஏவுகணை போல் உடலில் சென்று கொரோனா வைரஸ் இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து அதனை முழுமையாக செயலிழக்க செய்து விடும்.அதனால்,கொரோனா வைரஸால் நம் உடலில் இனப்பெருக்கம் முதலான எந்த வேலையும் செய்ய முடியாமல் தானாகவே அழிந்துவிடும்.மேலும்,ஒருவருடைய நுரையீரலில் வளரும் கொரோனா வைரஸ்களை இந்த முறையைப் பயன்படுத்தி முற்றிலும் அழிக்க முடியும்.

இருப்பினும்,இந்த சிகிச்சை முறை முழுமையாக வெற்றி பெற்று நடைமுறை பயன்பாட்டுக்கு வந்துவிட்டால்,உலகில் இனி கொரோனா மரணங்கள் இருக்காது”,என்று கூறினார்.

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

13 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

14 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

15 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

15 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

16 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

17 hours ago