உலக அழகியாக மெக்சிகோவின் 26 வயதான ஆண்ட்ரியா மெஸா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புளோரிடாவில், ஹாலிவுட் அரங்கில் உள்ள ராக் ஹோட்டல் ஆண்ட் கேசினாவில், 69வது ஆண்டு உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மிகுந்த பாதுகாப்புடனும் நடத்தப்பட்டது. இதில் 74 நாடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் மெக்சிகோ நாட்டில் 26 வயதான ஆண்ட்ரியா மெஸாவும், பிரேசிலின் ஜூலியா காமாவும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதனையடுத்து உலக அழகியாக மெக்சிகோவின் 26 வயதான ஆண்ட்ரியா மெஸா அறிவிக்கப்பட்டார். இவருக்கான உலக அழகி பட்டத்தை. கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற, தென்னாப்பிரிக்காவின் ஜோஜிபினி டுன்ஸி உலக அழகி மகுடத்தை சூட்டினார்.
பிரேசில் நாட்டுப் பெண் ஜூலியா காமா 2-வது இடத்தையும், பெரு நாட்டைச் சேர்ந்த ஜானிக் மெக்டா (27) 3-வது இடத்தைப் பெற்றுள்ளார். பத்து ஆண்டுகளுக்குப் பின் மெக்சிகோவை சேர்ந்த பெண் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…