சீனாவில் ஏற்பட்டுள்ள பயங்கரமான நிலநடுக்கம். கட்டிட இடிபாட்டில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு.
இன்று உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ், முதன்முதலாக சீனாவின் வுஹான் மாகாணத்தில் தான் முதலில் ஆரம்பமானது. இந்த வைரஸானது, அந்நாட்டு மக்களில் பல்லாயிரக்கணக்கானோரை பாதித்தது. மேலும் பலர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது தான் இந்த வைரசின் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு, அந்நாட்டு மக்கள் மெது மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதனையடுத்து, அந்த நாட்டை அடுத்ததாக அச்சுறுத்தும் விதத்தில், யுனான் மாகாணத்தில் கியாஜியா நகரை மையமாக கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. சீன புவியியல் ஆய்வு மையம், இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்ததுள்ளது.
யுனான் மாகாணத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட நகரங்களை இந்த நிலநடுக்கம் கடுமையாக உலுக்கிய நிலையில், ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிட இடிபாட்டில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…