ரூ.4,108 கோடி அபராதம் வழங்க ஒப்புதல்;’எவர்கிவன்’ கப்பலை விடுவித்த சூயஸ் கால்வாய் நிர்வாகம்..!

Published by
Edison

எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் சர்வதேச அளவில் உலகின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்குகிறது.இந்த கால்வாயில் கடந்த மார்ச் மாதம் ‘எவர்கிவன்’ என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல் ஒன்று பிற கப்பல்கள் செல்ல முடியாதபடி கால்வாயின் குறுக்காக தரை தட்டி நின்றது.

இதனால்,சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்தில் தடை ஏற்பட்டு, உலக வர்த்தகம் பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வார கால கடுமையான முயற்சிக்கு பின்னர் ‘எவர்கிவன்’ கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. இருப்பினும்,கப்பல் தரை தட்டி நின்றதால் தங்களுக்கு பெரும் வர்த்தக இழப்பு ஏற்பட்டதாகவும்,அதற்காக சுமார் 916 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,836 கோடி) இழப்பீடாக வழங்கும் வரை கப்பலை விடமாட்டோம் என சூயஸ் கால்வாய் நிர்வாகம் ‘எவர்கிவன்’ கப்பல் உரிமையாளரான ஜப்பானை சேர்ந்த ஷோய் கிசென் கைஷாவிடம் கேட்டுக்கொண்டது.
இந்த காரணத்தினால்,கப்பல் சூயஸ் கால்வாய் அருகே உள்ள ‘கிரேட் பிட்டர்’ என்ற ஏரியில் பிணையாக பிடித்து வைக்கப்பட்டது.அதன்பின்னர்,பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இழப்பீட்டு தொகையை 550 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.4,108 கோடி) வரை சூயஸ் கால்வாய் நிர்வாகம் குறைத்து கொண்டது.
இந்நிலையில்,இழப்பீட்டு தொகையை வழங்க ‘எவர்கிவன்’ கப்பலின் உரிமையாளர் ஷோய் கிசென் கைஷா ஒப்பு கொண்டு,அதற்கான ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட்டார்.இதனால், ‘எவர்கிவன்’ கப்பலை 3 மாதங்களுக்குப் பிறகு சூயஸ் கால்வாய் நிர்வாகம் நேற்று முன்தினம் விடுவித்தது.
இதனைத் தொடர்ந்து,கப்பல் நெதர்லாந்தின் ராட்டர்டாமை நோக்கி தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
Published by
Edison

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

11 hours ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

12 hours ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

12 hours ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

13 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

13 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

14 hours ago