ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் – நாகலாந்து முதல்வர்!

Published by
Rebekal

நாகலாந்தில் அமல்படுத்தியுள்ள ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என நாகலாந்து முதல்வர் நெய்பியு ரியோ கூறியுள்ளார்.

நாகலாந்து மாநிலத்தில் சனிக்கிழமை இரவு தீவிரவாதிகள் என நினைத்து  பொதுமக்கள் சென்ற வாகனத்தின் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் ராணுவ வீரர் உட்பட இருவர் பலியாகினர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து நாகலாந்து முதல்வர் நெய்பியு ரியோ அவர்கள் பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், மத்திய உள்துறை அமைச்சரிடம் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவியும் வழங்கியுள்ளோம். மத்திய அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 11 லட்சமும், மாநில அரசு தலா 5 லட்சமும் நிதி உதவியாக வழங்கும் என தெரிவித்துள்ளார். மேலும் நாகலாந்தில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறுமாறும், மத்திய அரசை கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சட்டம் நம் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

28 minutes ago

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்! பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…

58 minutes ago

ஏர் இந்தியா விமான விபத்து : 700 கிராம் தங்கம், ரூ. 80,000 பணம் மீட்பு!

அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

2 hours ago

தயவு செஞ்சி வதந்திகளை பரப்பாதீங்க! காந்தாரா-2 படக்குழு வேதனை!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…

2 hours ago

எப்பவும் இந்த கேள்வியை கேட்காதீங்க! கூட்டணி பற்றி கேட்டதால் டென்ஷனான பிரேமலதா!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…

3 hours ago

பதற்றத்தின் உச்சியில் போர்…”ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது” ஜி7 நாடுகள் முடிவு!

கனடா :  கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…

3 hours ago