காதலியின் பிறந்தநாளுக்காக ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலியா இளைஞர் ஒருவர் ஹோட்டலில் இருந்து தப்பித்து விதிமுறைகளை மீறி வெளியே நடனமாடியதால் 6 மா த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவர்களும், கொரோனா தொற்றுக்கான லேசான அறிகுறிகள் தென்ப்பட்டாலும் அவர்கள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு தனிமைப்படுத்தி கொள்ளாமல் வெளியே நடமாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த யூசுஃப் என்ற இளைஞர் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தியுள்ளனர்.
ஆனால், அவர் ஹோட்டலில் இருந்து ஏணியை பயன்படுத்தி அடிக்கடி தப்பித்து வெளியே சுற்றி திரிந்ததை அடுத்து போலீசில் ஹோட்டல் நிர்வாகத்தினர் புகார் செய்துள்ளனர். அதனையடுத்து அந்த இளைஞரை காதலியின் வீட்டில் உள்ள கபோர்டில் இருந்து கண்டுபிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தனிமைப்படுத்தி கொள்ளாமல் வெளியே சுற்றி திரிந்து விதிகளை மீறியதால் இளைஞருக்கு ஆஸ்திரேலியா நீதிமன்றம் 6மாதம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இளைஞர் அவரது காதலியின் பிறந்தநாள் என்பதால் தான் ஹோட்டலில் இருந்து தப்பித்ததாக கூறியுள்ளார்.
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…