அமெரிக்கா சாலையொன்றில் வங்கி பணத்தை எடுத்துச்சென்ற வாகனத்தின் கதவு திறந்து காற்றில் பணம் பறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளூர் வங்கியிலிருந்து பணத்தை எஃப்.பி.ஐ-க்கு எடுத்து செல்லும் டிரக் வாகனத்தின் கதவு திறந்து சாலையில் பணம் பறக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனத்தை நிறுத்திவிட்டு பணத்தை எடுக்க தொடங்கினர். இதனால் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், சாலையில் கிடந்த பணத்தை எடுத்த நபர்களிடமிருந்து பணத்தை திரும்ப பெறும் முயற்சியில் அந்த நாட்டு காவல்துறை ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவில் யார் பணத்தை எடுத்தார்கள் என்பதை வைத்து திரும்ப பெற உள்ளனர். மேலும், பணத்தை எடுத்தவர்கள் திரும்ப தரவும் என்று வங்கி நிர்வாகம் அளித்த அறிவிப்பை முன்னிட்டு பலரும் எடுத்த பணத்தை திரும்ப செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், அந்த நெடுஞ்சாலையில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலமாக எந்த வாகனம் அந்த சாலை வழி சென்றுள்ளது என்பதை வைத்து பணத்தை எடுத்தவர்களிடமிருந்து காவல்துறையினர் திரும்ப பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்கு பிறகு பணத்தை எடுத்து சென்ற ட்ரக் வாகனத்தை ஓட்டி சென்ற ஓட்டுநர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…