BIGG BOSS 5 : திருநங்கை நமிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டாரா…? காரணம் இது தானா!

Published by
Rebekal

திருநங்கை நமிதா மாரிமுத்து உடல்நல குறைவு காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட 4 பிக் பாஸ் சீசன்களை அடுத்து தற்பொழுது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐந்து நாள் நிகழ்ச்சி இதுவரை ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் முதல் முறையாக இந்த சீசனில் திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

அவர் தான் நடிகையும், மாடல் அழகியுமாகிய நமிதா மாரிமுத்து. இவர் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வில் தான் தனது வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இந்த உயரத்திற்கு வந்துள்ளேன் என்பதை குறித்து கூறியிருந்தார். இவரது கதை அனைவரையுமே ஒரு நிமிடம் கலங்க வைத்த நிகழ்வாகவே இருந்தது. நமிதா மாரிமுத்து அவர்களுக்கு ரசிகர் பட்டாளமும் தற்போது அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில் நேற்று நமிதாவுக்கும் தாமரைச்செல்விக்கும் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்ட நிலையில், நமிதா சற்று கோபப்பட்டார். அதன் பின்னதாக சாதாரணமாக அனைவரிடமும் நமிதா நன்றாகத்தான் பேசிக்கொண்டிருந்தார். இந்நிலையில் தற்பொழுது இன்றைய சிறப்பு நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியிடப்பட்ட நிலையில் அந்நிகழ்ச்சியில் நமிதா மாரிமுத்து காண்பிக்கப்படவில்லை.

 

எனவே அனைவரும் நமிதா மாரிமுத்து எங்கே என்ற கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் நமிதா மாரிமுத்து உடல்நலக்குறைவு காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து முழுவதுமாக தெரியாவிட்டாலும், அவர் தற்பொழுது பிக்பாஸ் வீட்டில் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

4 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

5 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

5 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

6 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

6 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

7 hours ago