போகி பண்டிகையின் வரலாறும்..! அதனை கொண்டாடுவதற்கான காரணமும்..!

Published by
மணிகண்டன்
  • தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
  • ‘ பழையன கழிதல் புதியன புகுதல் ‘ இதுதான் போகி பண்டிகையின் அர்த்தம்.

நம் முன்னோர்கள் ஒருவித சடங்குகளை சம்பிரதாயங்களை வைத்திருந்தனர். அதற்கு பின்னால் அர்த்தமுள்ள நல்ல விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அதனை தவிர்த்து அது மூடநம்பிக்கை என நாம் பெரும்பாலானவற்றை ஒதுக்கிவிட முடியாது. ஒதுக்கி விடவும் கூடாது.

போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது காற்று மாசுபடும் என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், அன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் எதுவும் கிடையாது. பழைய வீட்டு ஓலைகள் போன்ற உளர் தாவர பொருட்களை தான் தீயிட்டு கொளுத்தினர்.

அந்த காலத்தில் பணப்புழக்கம் அதிகமாக கிடையாது. விவசாயம் செய்து அறுவடை முடிந்த பின்னர்தான் கையில் வரவு இருக்கும். அப்படி வரும் நன்னாளை நம் வீட்டை சுத்தம் செய்து வரவேர்க்காமல், பணம் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்காமல் நம்மால் இயன்ற பொருள்களை வாங்கி வீட்டை சுத்தம் செய்து, வீட்டில் உள்ள பழைய பொருள்களை முக்கியமாக ஓலை வீடுகளில் உள்ள பழைய ஓலைகளை அகற்றி விட்டு புதிய ஓலைகள் கொண்டு வீடு மேய்வது. பழைய ஓலைகளை மற்றும் பழைய பொருட்களையும் எரிப்பது அல்லது போக்குவது தான் போகி பண்டிகை ஆகும்.  அன்றைய நாள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை கழித்து வீட்டிற்கு புது வர்ணம் பூசி தை முதல் நாளை கோலாகலமாக வரவேற்க வேண்டும்.

அன்றைய நாளில் வீட்டினை சுத்தம் செய்து வீட்டு வாசலில் வேப்பிலை, தும்பை இலை, துளசி, ஆவாரம்பூ, சிறுபீளை ஆகிய தாவரங்களை ஒன்றாக கட்டி வீட்டு வாசலில் காப்பு கட்டி வைக்க வேண்டும். வேப்பிலை. காற்றில் உள்ள கிருமிகளை அழிக்க வல்லது. தும்பை இலை தலைவலியை போக்கும். மாவிலை உடலுக்கு சுறுசுறுப்பை தரும். துளசி மருத்துவ குணம் வாய்ந்தது. இவ்வாறு நாம் வாசலில் கட்டி வைக்கும் அனைத்து தாவரங்களும் மருத்துவ குணம் கொண்டவை.

மேலும், மாவிலையும் வேப்பிலையும் நம் வீட்டிற்குள் கெட்ட சக்தியை அண்டவிடாது என்பது ஆன்மீக நம்பிக்கை. இதன் காரணமாகத்தான் நம்முன்னோர்கள் பொங்கலுக்கு முதல்நாள் இந்த காப்பை கட்டி தை முதல் நாளை ஆரோக்கியமாகவும் எந்தவித கெட்ட சக்தியும் அண்டாமல் இருக்கவும் ஒரு சம்பிரதாயமாக இந்தனை வைத்திருந்தனர். அதனையே நாமும் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை தை முதல் நாளிலிருந்து ஆரம்பிப்போம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

12 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

13 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

14 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

14 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

15 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

16 hours ago