நம் முன்னோர்கள் ஒருவித சடங்குகளை சம்பிரதாயங்களை வைத்திருந்தனர். அதற்கு பின்னால் அர்த்தமுள்ள நல்ல விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அதனை தவிர்த்து அது மூடநம்பிக்கை என நாம் பெரும்பாலானவற்றை ஒதுக்கிவிட முடியாது. ஒதுக்கி விடவும் கூடாது.
போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது காற்று மாசுபடும் என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், அன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் எதுவும் கிடையாது. பழைய வீட்டு ஓலைகள் போன்ற உளர் தாவர பொருட்களை தான் தீயிட்டு கொளுத்தினர்.
அந்த காலத்தில் பணப்புழக்கம் அதிகமாக கிடையாது. விவசாயம் செய்து அறுவடை முடிந்த பின்னர்தான் கையில் வரவு இருக்கும். அப்படி வரும் நன்னாளை நம் வீட்டை சுத்தம் செய்து வரவேர்க்காமல், பணம் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்காமல் நம்மால் இயன்ற பொருள்களை வாங்கி வீட்டை சுத்தம் செய்து, வீட்டில் உள்ள பழைய பொருள்களை முக்கியமாக ஓலை வீடுகளில் உள்ள பழைய ஓலைகளை அகற்றி விட்டு புதிய ஓலைகள் கொண்டு வீடு மேய்வது. பழைய ஓலைகளை மற்றும் பழைய பொருட்களையும் எரிப்பது அல்லது போக்குவது தான் போகி பண்டிகை ஆகும். அன்றைய நாள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை கழித்து வீட்டிற்கு புது வர்ணம் பூசி தை முதல் நாளை கோலாகலமாக வரவேற்க வேண்டும்.
அன்றைய நாளில் வீட்டினை சுத்தம் செய்து வீட்டு வாசலில் வேப்பிலை, தும்பை இலை, துளசி, ஆவாரம்பூ, சிறுபீளை ஆகிய தாவரங்களை ஒன்றாக கட்டி வீட்டு வாசலில் காப்பு கட்டி வைக்க வேண்டும். வேப்பிலை. காற்றில் உள்ள கிருமிகளை அழிக்க வல்லது. தும்பை இலை தலைவலியை போக்கும். மாவிலை உடலுக்கு சுறுசுறுப்பை தரும். துளசி மருத்துவ குணம் வாய்ந்தது. இவ்வாறு நாம் வாசலில் கட்டி வைக்கும் அனைத்து தாவரங்களும் மருத்துவ குணம் கொண்டவை.
மேலும், மாவிலையும் வேப்பிலையும் நம் வீட்டிற்குள் கெட்ட சக்தியை அண்டவிடாது என்பது ஆன்மீக நம்பிக்கை. இதன் காரணமாகத்தான் நம்முன்னோர்கள் பொங்கலுக்கு முதல்நாள் இந்த காப்பை கட்டி தை முதல் நாளை ஆரோக்கியமாகவும் எந்தவித கெட்ட சக்தியும் அண்டாமல் இருக்கவும் ஒரு சம்பிரதாயமாக இந்தனை வைத்திருந்தனர். அதனையே நாமும் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை தை முதல் நாளிலிருந்து ஆரம்பிப்போம்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…