ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்சில் உள்ள பிரபலமான ஈபிள் டவரில் வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று காவல்துறையினருக்கு வந்த தொலைப்பேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர், ஈபிள் டவரின் கீழே வெடிகுண்டு வைத்துள்ளதாக அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்ட அப்பகுதி முழுவதையும் காவல்துறையினர் கண்காணித்து வந்தனர்.
அந்த வகையில், ஈபிள் டவரில் தீவிர நடவடிக்கைளில் ஈடுபட்டு வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று போலீஸ் தெரிவித்தார். இதன் பின் நேற்று பிற்பகல் முதல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்பு, ஈபிள் கோபுரத்தை ஒரு நாளைக்கு 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு காரணமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…