ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை! அஜித் செய்த உதவியை விமர்சித்த போஸ் வெங்கட்!

Published by
பால முருகன்

சென்னை மக்கள் வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்காக செய்துகொடுத்து வருகிறார்கள். மக்களை போலவே சினிமா பிரபலங்கள் பலரும் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். குறிப்பாக விஸ்ணு விஷால் மற்றும் அமீர்கான் இருவரும் தங்களுடைய வீட்டிற்குள் தண்ணீர் புகுந்த நிலையில் தங்களுக்கு உதவி வேண்டும் என்று விஷ்ணு விஷால் கேட்டிருந்தார்.

இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் விரைந்து அதிரடியான நடவடிக்கையை எடுத்து. இந்த உதவிய செய்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு விஷ்ணு விஷால் தன்னுடைய நன்றியும்  தெரிவித்துக்கொண்டார். அதனை தொடர்ந்து இவர்களுக்கு உதவி தேவை என்ற தகவலை அறிந்த அஜித் உதவ ஏற்பாடு செய்ததாகவும் தெரியவந்தது.

வீட்டை சூழ்ந்த வெள்ளம்…அமீர் கான் – விஷ்ணு விஷால் பத்திரமாக மீட்பு.!

இதை பற்றி நடிகர் விஷ்ணு விஷால் “ஒரு பொதுவான நண்பர் மூலம் எங்கள் நிலைமையை அறிந்த பிறகு, அஜித் சார் எங்களைப் பார்க்க வந்து எங்கள் வில்லாவில் உள்ள சக உறுப்பினர்களுக்கான பயண ஏற்பாடுகள் செய்ய உதவினார்” என்று கூறியிருந்தார். அமீர், அஜித், விஷ்ணு விஷால் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலானது.

பிரபலங்களின் குரலை கேட்டு உதவி செய்த அஜித் ஏழை மக்களுக்கும் உதவி செய்யலாமே என்பது போல போஸ் வெங்கட் அஜித் செய்த உதவி பற்றி விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு.. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்.

(உங்களுக்குள் நல்ல இணைப்பு உண்டு).. ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை.,,( ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்களாம்)” என போஸ் வெங்கட் கூறியுள்ளார்.

Recent Posts

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…

10 minutes ago

விஜய் சட்டசபைக்கு கூட வர முடியாது…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமான…

33 minutes ago

“நீட் தேர்வு – மாணவர்கள் ஏமாந்தது தான் மிச்சம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும்,…

10 hours ago

‘அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டியதில் என்ன தவறு?’ – விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில்.!

பெரம்பலூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம்,…

10 hours ago

சண்டைக் கலைஞர் உயிரிழப்பு: ”இனிமேல் இப்படி நடக்கவே கூடாது”- தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ''வேட்டுவம்'' படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…

11 hours ago

இந்தியாவுக்கு வந்தது டெஸ்லா ஷோரூம்.. கார் விலை என்ன தெரியுமா.?

மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக…

11 hours ago