நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், மூன்றாம் நாளான இன்று படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. திடீரென இன்று மதியம் படப்பிடிப்பு தளத்திற்கு பாதுகாப்பு படைவீரர்களுடன் உள்ளே நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயை தனியே அழைத்து சம்மன் அளித்து, சிறிது நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் திடீரென்று விஜயை அங்கிருந்து அவரது காரில் வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல் இன்று மாலை வரை படப்பிடிப்பு நடத்த நிர்வாகம் அனுமதியளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் நீலாங்கரையில் உள்ள விஜயின் மற்றோரு வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் நெய்வேலியில் நிறுவனத்திற்குள் எட்டு நாள் படப்பிடிப்பை நடத்த தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. தற்போது அதிகாரிகள் விஜயை அழைத்துச் சென்றதால் மீண்டும் படப்பிடிப்பு நடைபெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், விஜய்யை படப்பிடிப்பு தளத்தில் இருந்து அழைத்து சென்ற சம்பவம் சினிமா வட்டாரங்களுக்கு இடையே பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…
பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…
ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…
ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு…
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…