இலங்கை அரசை கலைக்க 11 கூட்டணி கட்சிகள் அதிபரிடம் வலியுறுத்தல்.
இலங்கையில் அமைச்சரவை கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமல்படுத்துமாறு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 11 கூட்டணி கட்சிகள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளனர். அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, லங்கா சமசமாச கட்சிகள் மற்றும் இலங்கை கம்யூனிச கட்சி, தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா மகாஜன கட்சி உள்ளிட்ட கட்சிகள் அதிபரிடம் இலங்கை அரசை கலைக்க வலியுறுத்தியுள்ளனர்.
அரசாங்கத்திற்கு ஆதரவு தரும் கட்சிகளை இணைத்து கொண்டு காபந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். விலைவாசி உயர்வு, 13 நேர மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகளால் கடும் இன்னல்களை இலங்கை மக்கள் சந்தித்து வரும் நிலையில், அரசாங்கத்தை கலைக்க வலியுறுத்தியுள்ளனர். பொருளாதார நெருக்கடியை தடுக்க இலங்கை அரசு தவறியதை கண்டித்து பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…