இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2 திரைப்படம். இதற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பூந்தமல்லி அடுத்து நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி சினிமா தளத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு, செட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமைடந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து படப்பிடிப்பி தளத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடையே பேசி அவர், விபத்தில் உயிரிழந்த ஸ்ரீ கிருஷ்ணா, மது, சந்திரன் என்ற 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக தெரிவித்தார். பின்னர் சற்று நூலிழையில் நான் உயிர் தப்பிவிட்டேன் என கூறினார். மேலும் சினிமா தொழிலில் இருக்க வேண்டிய பாதுகாப்பு இல்லை என குறிப்பிட்டார். இதுபோன்று மீண்டும் ஏற்பட கூடாது என வருத்தத்துடன் தெரிவித்தார்.
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…