ஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்களை, தலிபான்கள் கடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்தது முதல் அங்கிருந்து இந்தியர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியர்கள் மட்டுமல்லாது, மற்ற நாட்டினரும் அங்கிருந்து தப்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்களை, தலிபான்கள் கடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த இந்தியர்களை, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் தலிபான்கள் கடத்தியதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், ஆப்கானிஸ்தான் தலிபான்கள் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களை தாக்க மாட்டோம் என தலிபான்கள் கூறியிருந்த நிலையில், இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…