#BREAKING: நேட்டோவின் முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் – ரஷ்யா எச்சரிக்கை

Published by
பாலா கலியமூர்த்தி

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று நேட்டோ கூட்டமைப்பு அறிவிப்பிற்கு ரஷ்யா கடும் கண்டனம்.

உக்ரைன் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்த ரஷ்யா, இன்று தாக்குதலை குறைத்துள்ளது என தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், தலைநகர் கீவ்-ஐ கைப்பற்ற மீண்டும் ரஷ்யா கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி, உக்ரைன் தலைநகர் கிவ்-ல் மீண்டும் அபாய ஒலி எழுப்பப்பட்டு வருகிறது, வான்வெளி தாக்குதலுக்கான எச்சரிக்கை என தகவல் கூறப்படுகிறது. மேலும், ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் 2வது பெரிய நகரமான கார்கிவ் பகுதிகளிலுள்ள கல்லூரிகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே ஒருபக்கம் பெலாரசில் ரஷ்யா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் ரஷ்ய படைகள் உக்ரைன் மீது மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் மூன்றாம் உலகப்போரின் உச்சம் என எச்சரிக்கை விடுத்தது வருகிறது. ரஷ்யாவை எதிர்த்து போராட அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனுக்கு டாங்கிகள், போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்களை தொடர்ந்து அனுப்பி வருகிறது.

அந்தவகையில், உக்ரைனுக்கு ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள், ராணுவ டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி வழங்கப்படும் என்று நேட்டோ கூட்டமைப்பு முடிவு செய்து அறிவித்திருந்தது. இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி வழங்க முன் வந்திருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று ஐந்தாவது நாளாக போர் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல் உக்ரைனில் சிறையில் உள்ள கைதிகளுக்கு ராணுவ அனுபவம் இருந்தால் அவர்களை உடனே விடுதலை செய்ய தயார் என்றும் ஆனால் விடுதலை செய்யப்படும் கைதிகள் ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஈடுபட வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரஷ்ய படைகளை எதிர்த்து போராட உக்ரைன் பொதுமக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு, போருக்கு தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், போரில் சண்டையிட உக்ரைன் சிறையில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்று உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

14 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

15 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

16 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

17 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

18 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

19 hours ago