ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 15 முதல் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஐதராபாத்தில் ரஜினி – நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், 8 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வந்த படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வந்தனர்.
இதனிடையே, ரஜினி ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்கயிருக்கிறார். அதற்கான அறிவிப்பு வரும் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. புதிய கட்சி அறிவிப்புக்கு முன்னதாக அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துவிட நடிகர் ரஜினி திட்டமிட்டுருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த சென்னை திரும்புவதாக தகவல் ஊற்றப்படுகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…