#BREAKING: உக்ரைனின் இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா.

உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து, உக்ரைன் மீது முழு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அந்நாட்டு அதிபர் புதின் நேற்று உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, ரஷ்யா ராணுவ படை உக்ரைனை சுற்றிவளைத்து கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. பெரிய பலத்தை கொண்டுள்ள ரஷ்ய படைக்கள் தாக்குதலுக்கு, உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் ரஷ்ய துருப்புக்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் நுழைந்து, அந்நகரத்தையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, உக்ரைன் தலைநகரான கீவ் மீது தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதியை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் உக்ரைனை முழுவதும் ரஷ்ய படைகள் சுற்றிவளைத்து தாக்குதலை நடத்தி, பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகிறது. இனி உக்ரைன் தலைநகர் கீவ்-வை பிடித்துவிட்டால் உக்ரைன் நாடு முழுவதையும் ரஷ்யா கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், உக்ரைன் ராணுவம், ரஷ்ய படைகளை எதிர்த்து முடிந்தவரை போராடி வருகிறது. இதனால் போர் உச்சக்கட்டத்தில் நடந்து வருகிறது. எந்நேரத்திலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ரஷ்யாவை எதிர்த்து போராட உக்ரைனுக்கு நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் என பல நாடுகளும் ராணுவ நிதி உதவி மற்றும் ஆயுதங்களை அனுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வரலாற்று சாதனையை தவறவிட்ட முல்டர்…செம டென்ஷனான கிறிஸ் கெயில்!

வரலாற்று சாதனையை தவறவிட்ட முல்டர்…செம டென்ஷனான கிறிஸ் கெயில்!

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…

2 hours ago

பால் வேண்டும், மோர் வேண்டும் ஆனா… “கால்நடை மனநிலை” பற்றி சீமான் பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…

2 hours ago

ரொம்ப பேசுது அபராதம் போடணும்! Grok மீது போலாந்து அமைச்சர் புகார்!

வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…

3 hours ago

INDvsENG : “ஆரம்பே அமர்க்களம்”..இங்கிலாந்தை திணற வைத்த நிதிஷ் குமார் ரெட்டி!

லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…

4 hours ago

அதிமுக – பா.ஜ.க. கூட்டணியால் முதல்வருக்கு காய்ச்சல்! நயினார் நாகேந்திரன் பதிலடி!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…

5 hours ago

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…

6 hours ago