கிழக்கு தைவான் மற்றும் தென்மேற்கு ஜப்பான் இடையே பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை இல்லை.
ஜப்பான் நாட்டில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவும் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் யோனாகுனி என்ற நகரத்தில் இருந்து தென் மேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது, கிழக்கு தைவானுக்கும் தென்மேற்கு ஜப்பானுக்கும் இடையில் இன்று ஒரு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ஆனால் சுனாமி எச்சரிக்கை இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தைபேயில் லேசான நடுக்கம் உணரப்பட்டது, ஆனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. தைவானில் இருந்து கிழக்கே 110 கிலோமீட்டர் (66 மைல்) தொலைவில் உள்ள யோனகுனியின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 27 கிலோமீட்டர் (17 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தைவானின் மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் கடல் மேற்பரப்பில் இருந்து 20 கிலோமீட்டர்கள் (12 மைல்) அடியில் ஏற்பட்டுள்ளது என்றும் அலைகள் சீற்றம் இருக்கலாம், ஆனால் சுனாமி ஆபத்து இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக…
சென்னை : 2019-ல் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், இதன் 3D வடிவமைப்பு வீடியோ இன்றைய தினம்…
சென்னை : கீழடி அகழாய்வு தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் 2014 முதல் நடைபெற்று…
மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் 222 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுவதற்கு மத்திய…
அகமதாபாத் : ஏர் இந்தியா விமானம் எண் AI 159 புது டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு வந்தது. அங்கிருந்து லண்டனுக்குப்…
கடலூர் : மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள தராசு கிராமத்தில், 80 வயது மூதாட்டி கவுசல்யா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு…