பெரு நாட்டில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்னமெரிக்க நாடான பெரு நாட்டின் தலைநகராகிய லிமா மற்றும் சென்ட்ரல் அண்டஸ் நகரை இணைக்கும் சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. இந்த பஸ்சில் 63 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கார்ரிடிரா சென்ட்ரல் சாலையில் உள்ள மலைப்பாங்கான ஒரு பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 650 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது தான் இந்த விபத்துக்கு காரணம் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…