மைக்ரோசாப்ட் டிக்டாக்கின் உலக செயல்பாடுகளை வாங்க பரிசீலித்து வரும் நிலையில், இந்தியாவில் முதலீடு செய்வதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன், பைட்டான்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
கடந்த மாத இறுதியில் இந்த பேச்சுவார்த்தை தொடங்கின என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இன்னும் ஒப்பந்தத்தை எட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் குழு இந்த சந்தர்ப்பத்தில் டிக்டாக்கில் முதலீடு செய்வது பயனுள்ளது என்பதை பரிசீலித்து வருகிறது. மேலும், தற்போது டிக்டாக்கில் முதலீடு செய்வதால் கிடைக்கும் லாபம் மற்றும் இழப்பை மதிப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் டிக்டாக் ஜூன் மாத இறுதியில் தடைசெய்யப்படுவதற்கு முன்னர் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுஇருந்தது. இதன் மதிப்பு 3 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் கேட்டபோது, இந்த செய்தி முற்றிலும் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார்.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டிக்டாக் மற்றும் விசாட் போன்றசெயலிகளை தடைசெய்யும் நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இந்த தடை 45 நாட்களில் நடைமுறைக்கு வருகிறது என்று கடந்த டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்ட தனது இரண்டு தனி நிர்வாக உத்தரவுகளில் தெரிவித்தார். இதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செப்டம்பர் 15 வரை அவகாசம் அளித்துள்ளார்.
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…