கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என பாகிஸ்தான் அரசு எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில், பல நாடுகளில் இதன் காரணமாக கொரோனா மூன்றாம் மற்றும் நான்காம் அலைகள் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவது மட்டுமே ஒரே ஆயுதம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
எனவே, பல்வேறு நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சில நாடுகளில் தடுப்பூசி செலுத்துபவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச சலுகைகள் வழங்கப்படுவதுடன், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் பாகிஸ்தானிலும் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருவதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி செலுத்தாதவர்களின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அலுவலகங்கள் வருவதற்கும், சம்பளம் பெறுவதற்கும் அனுமதி இல்லை எனவும், உணவகங்கள், ஷாப்பிங் மால்களில் இவர்களுக்கு தடை விதிக்கப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. எனவே பாகிஸ்தானில் உள்ள மக்கள் பலரும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர் .
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…