#பூட்டான் விவகாரம்# பிற நாடுகளுக்கு வாய்ப்பூட்டு! சீனா பகிரங்கம்!

Published by
kavitha

“பூட்டான் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிட தேவையில்லை; எங்களை குற்றம்சாட்ட உரிமை கிடையாது என்று சீனா பகிரங்க  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது”.

இந்திய எல்லைப்பகுதியான லடாக் எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து,ஜப்பான், ஈராக்,உட்பட உலகின் பல நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நாடுகள் அனைத்தும் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு பகிரங்கமாக தங்களது ஆதரவினை தெரிவித்து உள்ளன. இந்தியா மட்டுமில்லாமல் அண்டை நாடுகள் அனைத்துடனும், சீனாவுக்கு எல்லை உட்பட பல்வேறு பிரச்னைகளை உருவாக்கி வைத்துள்ளது. இதில்  குறிப்பாக, பூடானை ஆக்கிரமிக்க சீனாத் தொடர்ந்து  தனது மூக்கை அங்கு நுழைக்க முயற்சித்து வருகிறது.

இவ்விவகாரத்தில் தனக்கு சம்பந்தம் இல்லாமல் போல காட்டிவந்த சீனா தற்போது  பூடானுடன் எல்லை பிரச்னை உள்ளதாக சீனா முதல்முறையாக வாய் திறந்து தெரிவித்துள்ளது.

See the source image

இந்நிலையில் இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனா – பூடான் இடையேயான எல்லை, இதுவரை, சரியாக வரையறுக்கப்படவில்லை. எனவே பூடானுடன் எல்லை பிரச்னையானது மிக நீண்டகாலமாக உள்ளது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண கடந்த 1984 முதல் 2016ம் ஆண்டு வரை, 24 முறை, சீனா-பூடான் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் திட்டங்களை  சீனா  தன்வசம் வைத்துள்ளது. மேலும் இந்த விவாகரப் பிரச்னையில் மூன்றாவது  ஒரு நாடு தலையிட தேவையில்லை; மேலும் சீனாவை குற்றம்சாட்டவும் அதற்கு உரிமையில்லை. என்று பகிரங்கமாக உலக நாடுகளுக்கு அறிக்கையில்  மூலமாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

7 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

7 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

8 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

8 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

9 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

9 hours ago