சீனாவில் “கொரனா வைரஸ்” காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் முதலில் அந்நாட்டில் உள்ள வூஹான் நகரில் இருந்து பரவியது.தற்போது அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது.
இந்த வைரஸ் காய்ச்சலால் நேற்று மட்டும் 15 பேர் இறந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. பலியானவர்கள் 50 வயது முதல் 87 வயதிற்குள்ளவர்கள் , அவர்களில் 11 பேர் ஆண்களும் , 4 பேர் பெண்களும் ஆவார். இதையெடுத்து இன்று கொரோனா வைரஸ் காய்ச்சலால் 13 பேர் பலியாகி பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 1,500 பேருக்கு மேல் பாதிப்படைந்து உள்ளனர்.
இந்நிலையில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வூஹான் நகரில் ஒரு புதிய மருத்துவமனை கட்டப்பட்டு அந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுக்க சீனா முடிவு செய்து ஒரு புதிய மருத்துவமனை கட்டி வருகிறது.
இந்த மருத்துவமனைக்காக சுமார் 25,000 சதுர மீட்டரில் 1,000 படுக்கைகள் கொண்ட அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.இதற்கான கட்டுமான பணிகள் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது.இன்னும் ஏழு நாள்களில் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மருத்துவமனை கட்டும் பணியில் 35 குழி தோண்டும் இயந்திரங்கள் , சுமார் 7,000 பேர் பகலாக வேலை செய்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனையை ஏற்கெனவே தயார் நிலையில் உள்ள சுவர்களை கொண்டு கட்டி முடிக்க முடிவு செய்து உள்ளனர். இதனால் மருத்துவமனை எளிதாகவும் , குறைந்த செலவிலும் கட்டலாம் என கூறப்படுகிறது.
கடந்த 2003-ம் ஆண்டு சீனாவில் சார்ஸ் வைரஸ் தாக்குதலின் போதும் அதிகபேர் பாதிக்கப்பட்டதால் பெய்ஜிங் நகரில் இதேபோன்று குறைந்த நாள்களில் ஒரு மருத்துவனை கட்டப்பட்டது. அதை போன்று மீண்டும் ஒரே வாரத்தில் புதிய மருத்துவமனை கட்ட உள்ளனர்.
டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…
அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ், ஈரானின் மூன்று…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…