புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது சீனா!

வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் வெளியீட்டு மையத்திலிருந்து, புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.
சீனா ஒரு புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் வெளியீட்டு மையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.
யோகன் -33 என்ற செயற்கைக்கோள் லாங் மார்ச் -4 சி ராக்கெட்டில் ஏவப்பட்டு திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது. இது லாங் மார்ச் கேரியர் ராக்கெட் தொடரின் 357 வது விமானப் பணியாகும். இந்த பணி ஒரு மைக்ரோ மற்றும் நானோ தொழில்நுட்ப சோதனை செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் அனுப்பியது.
இந்நிலையில், இரண்டு செயற்கைக்கோள்களும் அறிவியல் பரிசோதனைகள், நில வள கணக்கெடுப்பு, பயிர் விளைச்சல் மதிப்பீடு மற்றும் பேரழிவு தடுப்பு மற்றும் குறைப்புக்கு பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025