சீனாவின் வூஹான் நகரில் வசிக்கக்கூடிய அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பம் ஆனது. இதனையடுத்து உலக நாடுகளில் பரவியது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்று பலவகைகளில் உருமாற்றம் அடைந்து பல்வேறு நாடுகளை பாதித்து வருகிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. சீனாவிலுள்ள ஜியாங்சு, செச்சுவான், லியானிங், ஹூனான், ஹூபெய் உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் இந்த டெல்டா வகை கொரோனா வேகமாக பரவி வரும் காரணத்தால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது சீனாவின் தலைநகர் பெய்ஜிங் உட்பட முக்கியமான 13 நகரங்களில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொடங்கிய இடமான வூஹான் நகரத்தில் மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நகரத்தில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…