நிலத்திற்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு, கடலை வகைகள் உடலுக்கு சத்து அளித்தாலும் அதன் மூலமாக வேறு ஏதேனும் பாதிப்புகள் இருக்கும் என்றுதான் அனைவரும் கருதுகிறோம். ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கு பல நன்மைகளை கொண்டது. அதன் சுவை மட்டுமல்லாமல் அதில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் மருத்துவ குணங்களும் நிறைந்து உள்ளது. அவற்றை பற்றி அறியலாம் வாருங்கள்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ, பி, சி பொட்டாசியம், மெக்னீசியம் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரும்பு, கால்சியம் மற்றும் அதிக அளவிலான கலோரிகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிக அளவில் கொழுப்பு இல்லாததால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பயமின்றி சாப்பிடலாம். மேலும் இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதுடன் குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இது உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது. இளமையான தோற்றம் பெற விரும்புபவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை பயன்படுத்தலாம்.
இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் காரணமாக உடலில் உள்ள பிரீ ரேடிக்கல் செல்களை தடுக்கும். மேலும் உடலை இளமையுடன் வைத்திருக்கும். கர்ப்பிணி பெண்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை நிச்சயம் தொடர்ந்து சாப்பிடலாம். கரு வளர்ச்சிக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும், இதில் உள்ள சத்து காரணமாக கரு வலுப்பெறும். கருத்தரிக்க விரும்புவர் முதல் கர்ப்பிணிகள் வரை சர்க்கரை வள்ளிக்கிழங்கை நிச்சயம் உண்ணலாம். மேலும் இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிக அளவில் பீட்டா, கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி, காம்ப்ளக்ஸ் இரும்பு சத்து நிறைந்துக் காணப்படுவதால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறுவதுடன் உடலை நோய் எதிர்ப்பு சக்தியுடன் பாதுகாக்கிறது. ஆரோக்கியமான உடல் உருவாகவும் வழிவகுக்கிறது.
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…
டெல்லி : நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில், ''திமுக எப்போதும் தேச ஒற்றுமையை…