கபல்பதி பிராணயாமா செய்வதால் ஏற்படும் 6 நன்மைகள் அறியலாம் வாருங்கள்…!

Published by
Rebekal

நமது முன்னோர்கள் கண்டறிந்ததில் மிகச்சிறந்த ஒன்று யோகா. இதன் மூலமாக நமது உடல், மனம் ஆரோக்கியம் பெற உதவுவதுடன் உடலில் உள்ள அனைத்து நோய்களையும் இது தீர்க்கவும் இந்த யோகாசன முறைகள் உதவுகிறது. உங்களுக்கு கபல்பதி பிராணயாமா செய்வதன் மூலம் கிடைக்கக் கூடிய நன்மைகள் தெரியுமா? இந்த மூச்சுப் பயிற்சி உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழிப்பதற்கு மிகவும் உதவுகிறது. இதனால் கிடைக்கக் கூடிய ஆரோக்கியமான 6 நன்மைகள் குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

பதட்டம்

இந்த கபல்பதி பிராணயாமாவை தவறாமல் தினமும் செய்து வருவதன் மூலமாக நமது மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு மனமகிழ்ச்சியுடன் நிம்மதியாக வாழ முடியும். இது மட்டுமல்லாமல் மனதை அமைதியாக வைக்க விரும்புவர்கள் கூட இந்த கபல்பதி பிராணயாமாவை செய்யலாம்.

ஆற்றல்

இந்த கபல்பதி எனும் மூச்சுப்பயிற்சியை செய்வதன் மூலமாக, செரிமான அமைப்பு சீராக இயங்க உதவுகிறது. மேலும், நமது கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தங்கள் வேலையை சரியாக செய்வதற்கும் இது மிகவும் உதவுகிறது. இது மட்டுமல்லாமல் குடல் தொடர்பான பிரச்சினைகளை நீக்க இது உதவுகிறது.

கருவளையம்

இந்த கபல்பதி மூச்சுப்பயிற்சியை செய்வதன் மூலமாக கண்களின் கீழ் உள்ள கருவளையம் நீங்குவதற்கு இது மிகவும் உதவுகிறது. இதை தொடர்ந்து செய்வதன் மூலம் நமது பதற்றம் மாறுவதால் கண்களில் உள்ள கருவளையம் போய்விடும் எனவும் கூறப்படுகிறது.

இரத்த ஓட்டம்

இந்த மூச்சுப்பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலமாக நமது உடலில் இரத்த ஓட்டம் சரியாக இயங்குகிறது. மேலும் நமது உடலின் அனைத்து பாகங்களும் அதன் வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு இது உதவுகிறது.

கருவுறுதல்

இந்த கபல்பதி மூச்சு பயிற்சி செய்வதன் மூலமாக பெண்கள் கருவுறுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இது பெண்கள் உடலுறவின் போது உற்சாகமாக இருக்கவும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

முக அழகு

இந்த மூச்சுப்பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வருவதன் மூலம் உடலில் உள்ள வெப்பம் தணிய உதவுகிறது. மேலும், முகம் பளபளபடையவும் இது பெரிதும் உதவுகிறது.

Published by
Rebekal

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

46 minutes ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

53 minutes ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

2 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

3 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

4 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

4 hours ago