விஜய்யுடன் நடிக்க 150 முறை வாய்ப்பு கேட்டும் மறுத்துவிட்டார் என நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெய். இவரது நடிப்பில் தற்போது பார்டி, சிவ சிவா, எண்ணித்துணிக ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. விரைவில் இதற்கான ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சில புதிய திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில், நேற்று சென்னையில், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெய் கலந்து கொண்டுள்ளார்.
அதில் பேசிய ஜெய் கூறியதாவது ” விஜய் சாருடன் ‘பகவதி’ படத்தில் இணைந்து நடித்தது பெருமை. அதன்பிறகு அவரின் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக இதுவரை அவரிடம் 150 முறை வாய்ப்பு கேட்டிருப்பேன். ஆனால், அவர்நீ தான் படங்களில் ஹீரோவாக நடித்து வர.. அப்புறம் ஏன்.. என்று கூறிவிட்டார் ” என கூறியுள்ளார்.
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…