தென்கொரியா-வடகொரியா இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
தென்கொரியா-வடகொரியா இரு நாடுகளுக்கும் இடையே இருந்த பனிப்போர் கடந்த 2018-ஆண்டு தான் முடிவுக்கு வந்தது.அதனை வெளிப்படுத்தும் விதமாக இரு நாட்டு அதிபர்களும் எல்லையை கடந்த நட்பை வெளிப்படுத்தினார்கள்.தொடர்ந்து இரு நாடுகளும் நட்பு பாராட்டி வந்த நிலையில் தற்போது அதில் உரசல் ஏற்பட்டுள்ளது.
தென் கொரியா-வடகொரியா இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் போக்கு உருவாக்கி வருகிறது.வடகொரியாவிற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததால் இந்த மோதல் உருவாகியுள்ளது.இரு தரப்பு இடையே வார்த்தை மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது.இதனிடையே வடகொரிய அதிபர் கிம்மின் தங்கையான கிம் யோ ஜோங் தென் கொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதுவும் தென் கொரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளின் உறவை துண்டிக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் ராணுவத்துடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.தென் கொரியா தங்களது எச்சரிக்கையை மதிக்கவில்லை என்றும் குற்றம்ச்சாட்டியுள்ளார்.
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…