நடிகை தேவயானி செய்த செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் 1990-களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் தேவயானி. இவரது நடிப்பில் வெளியான காதல் கோட்டை, நீ வருவாய் என, சூரிய வம்சம், கிரி, ஆகிய திரைப்படங்கள் மறக்கமுடியாத ஒன்றாக தான் இருக்கிறது.
கடந்த 2001-ஆம் ஆண்டு இவர் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ராஜகுமாரனின் சொந்த ஊருக்கு அருகேயுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் அவரும் அவரது மனைவி தேவையானியும் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள்.
இவர்களது தோட்டத்துக்கு அருகே ஒருவர் 2 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்காக பிளாட்டுகளாக மாற்றியுள்ளார். இதனை அறிந்த, தேவயானி அவரிடம் பேசி அந்த 2 ஏக்கர் நிலத்தை பணம் கொடுத்து வாங்கி, பின்அதை விவசாய நிலமாக மாற்றி, தற்போது 2 ஏக்கரில் செண்டுமல்லி பயிரிட்டுள்ளார்.
அதற்கான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இயற்கை விவசாயியாக மாறியதுடன் மட்டுமில்லாமல், தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றியதற்காக தேவயானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…