சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனாவைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த கொரோனா வைரஸ் சீனாவில் பல மாகாணங்களில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று வரை 132 இறந்த நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 38 அதிகரித்து இன்று காலை நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.மேலும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலில் 7,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த வைரஸ் நோய்க்கு சீனா அரசு இதுவரை எந்த வித மருந்தோ அல்லது தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் நாள்தோறும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக அரசும் , மருத்துவர்களும் பெரும் அதிர்ச்சியில் உள்ளது.
இதற்கிடையே சீனாவில் வசித்து வரும் தங்கள் நாட்டினரை மீட்கும் பணியில் பல நாடுகள் தொடங்கி உள்ளது. அதில் சீனா வுஹான் மாகாணத்தில் இருந்து 200 அமெரிக்கர்கள் ஒரு விமானம் மூலமாக கடந்த செவ்வாய் கிழமை இரவோடு இரவாக தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…