#breaking: ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான்!!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றி வளைத்ததை அடுத்து, தற்போது ஆட்சியை கைப்பற்றியது தலிபான் அமைப்பு.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து படிப்படியாக வெளியேறியது.

இதனை பயன்படுத்தி கடந்த சில மாதங்களாக தலிபான்கள், ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான தாகர் உட்பட பல மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ளனர். கடந்த மாதம் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், ராணுவ படைகளுக்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி ஏராளமான குழந்தைகள் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தலிபான்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அந்நாட்டு ராணுவம் பின்வாங்கி வந்தது. ஆப்கானிஸ்தானில் கந்தஹார், ஜலாலாபாத், மசார் இ ஷெரீப், குந்துஸ் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நகரங்களை கைப்பற்றிய தலிபான்கள், இன்று காலை தலைநகர் காபூல் நகருக்குள் நுழைந்தனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் தலிபான் பயங்கரவாதிகள் நுழைந்து உள்ளதால் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.

அமைதியான முறையில் அதிகாரத்தை விட்டு தர தலிபான்களுடன், அந்நாட்டு அரசு பேசுச்சுவார்தை நடத்த உள்ளதாக தகவல் கூறப்பட்டது. தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சி பொறுப்புகளை ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றி வளைத்ததால் அதிபர் பதிவில் இருந்து அஷ்ரப் கனி விலக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை,  தலிபான் அமைப்பினர் கைப்பற்றும் சூழல் நிலவுவதால் அமெரிக்கர்களை அந்நாட்டு ராணுவம் மீட்டு வருவதாக கூறப்பட்டது. அதன்படி, காபூல் தூதரகத்திலிருந்து அமெரிக்க அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தையம் தலிபான் அமைப்பினர் தற்போது கைப்பற்றியுள்ளனர். தலிபான் அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து, முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது ஜலாலி இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

9 minutes ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

30 minutes ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

33 minutes ago

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

2 hours ago

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்.!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…

2 hours ago

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

3 hours ago