ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பர்க் என்பருக்கு 16 வயது இளம்பெண் ஆவார். இவர் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வந்தார். பின்பு இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு போராட்டம் நடத்தினார். இதன் மூலம் அவர் உலக நாடுகளில் மிகவும் பிரபலமானார்.
ஐ.நா.வில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்று பேசிய இவர் உலக நாடுகளின் தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். வளிமண்டலத்தை அச்சுறுத்தும் வாய்வு வெளியேற்றத்தை எதிர்கொள்வதில் இளம் தலைமுறையினரை உலகத்தலைவர்கள் ஏமாற்றி விட்டதாக குற்றம்சாட்டினார். உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த கிராட்டாவுக்கு மிக பிரபலம் வாய்ந்த டைம் பத்திரிக்கை கௌரவம் செய்துள்ளது. மேலும், 2019-ம் ஆண்டின் சிறந்த நபராக கிரேட்டாவை டைம் பத்திரிக்கை தேர்வு செய்துள்ளது. கிரேட்டா என்பவர் ஒரு சாதாரண சிறுமி உண்மையை உரக்கச் சொல்லிய அவர் இந்த ஆண்டின் சிறந்த நபர் என டைம் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கிரேட்டா கோபத்தை கண்டிப்பாக கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும், நண்பர்களுடன் சேர்ந்து பழமையான திரைப்படங்கள் பார்க்க வேண்டும், என அவர் பதிவிட்டிருந்தார். இதற்கு கிரேட்டா பதிலளிக்கும் விதமாக தன் டிவிட்டர் பாயோவை மாற்றி கிரேட்டா கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கும் சிறுமி எனவும் நண்பர்களுடன் சேர்ந்து பழமையான திரைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என கூலாக பதிவிட்டுள்ளார்.
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…