குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த வாரமும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8 ஆவது பிரமாண்டமான துவக்கவிழா இருப்பதால் ஒளிபரப்பபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் கூடிய சில நிகழ்ச்சிகள் மக்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக மாறிவிடுகிறது. தொடர்ச்சியாக சில நிகழ்ச்சியை பார்த்து கூடியவர்கள் எண்ணிக்கையும் அதிகம். முக்கியமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப படும்பொழுது எந்த நிகழ்ச்சிகளும் அதிகமாக எடுபடாது. ஆனால் இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கடந்து குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி தான் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் பைனல் தொடர் ஒளிபரப்பு காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பபடவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடுகிறதே என அதை பார்த்தவர்களை விட குக் வித் கோமாளி போடவில்லையே என வருத்தப்பட்டவர்கள் தான் அதிகம் என்று கூறியே ஆக வேண்டும்.
அது போல இந்த வாரமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்காதாம். காரணம் என்னவென்றால் சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட துவக்கவிழா இருப்பதால் அந்த நிகழ்ச்சி தான் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியிலிருந்து இரவு 8 மணி வரை ஒன்பது மணி நேரம் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட இருக்கிறதாம். எனவே இந்த வாரமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். போன வாரம் ஒளிபரப்பப்படாததற்கு மிகுந்த சோகத்தில் இருந்த ரசிகர்கள் இந்த வாரமும் ஒளிபரப்பபடவில்லை என்று தெரிந்தால் வருத்தத்திலே உடைந்து போய் விடுவார்கள் போல, இருந்தாலும் அடுத்த வாரம் எதிர்பார்க்கலாம். வேறு எந்த நிகழ்ச்சியும் உங்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தடையாக வராது என்று நம்புவோம்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…