எமிரேட்ஸ் விமான நிறுவனம் பாகிஸ்தானில் இருந்து பயணிகள் சேவை விமானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்த்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், எங்கள் விமானங்களில் ஹாங்காங்கிற்கு பயணம் செய்த 26 பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடந்து இன்று முதல் பாகிஸ்தானில் இருந்து பயணிகள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க எமிரேட்ஸ் முடிவு எடுத்துள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு சரக்கு விமானங்கள் தொடரும் எனவும் அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 20-ம் தேதி அன்று ஹாங்காங்கிற்கு எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்த 26 பயணிகள் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த பயணிகள் பாகிஸ்தானில் இருந்து பயணம் செய்து துபாய் விமான நிலையம் வழியாக சென்று பின்னர் இரண்டாவது எமிரேட்ஸ் விமானத்தில் ஹாங்காங்கிற்கு சென்றுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 188,926 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…