‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரொனோ தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் 1,52,879 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து, திரைப் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ஆலியா பட், கார்த்திக் ஆர்யன், ஆமிர் கான், கோவிந்தா, பூமி பெட்னேகர் ஆகியோர் கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில்,மலையாளத்தில் ‘மாயநதி’ மற்றும் தமிழில் தனுஷுடன் ‘ஜகமே தந்திரம்’ மற்றும் விஷாலின் ‘ஆக்சன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மலையாள இளம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது:”நான் கொரொனோ பரிசோதனை செய்ததில் எனக்கு கொரொனோ பாசிடிவ் என வந்துள்ளது.அதனால்,நான் முகக்கவசம், சானிடைசர், சமூக இடைவெளி என அனைத்து விதிகளையும் கடைப்பிடித்து வருகிறேன்.அதைப்போல, நீங்கள் அனைவரும் முகக்கவசம் அணியுங்கள்,மேலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொண்டு பாதுகாப்பாக இருங்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…