“வூஹான் ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது.. அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது!”- சீன மருத்துவர் பரபரப்பு தகவல்

Published by
Surya

கொரோனா வைரஸ், வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இயற்கையாக உருவானது கிடையாது. அதற்கான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக சீன வைராலஜிஸ்ட் டாக்டர் லி மெங் யான் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் உலகளவில் இதுவரை 2.91 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9.28 லட்ச பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்காரணமாக வூஹானில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவிய உண்மைகளை சீனா மறைத்து விட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் கொரோனா பரவல் தொடங்கிய போதே குற்றம் சாட்டி வந்தனர். அதனை சீனா தொடர்ந்து மறுத்துக்கொண்டே வந்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் இயற்கையானதில்லை எனவும், அதனை சீன அரசு கட்டுப்பாட்டில் உள்ள வூஹான் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் சீன வைராலஜிஸ்ட் டாக்டர் லி மெங் யான் தெரிவித்துள்ளார். ஹாங்காங் பொது சுகாதார மையத்தில் பணியாற்றும் டாக்டர் லி மெங் யான், சீனாவில் இருப்பது தனக்கு பாதுகாப்பற்றது என அறிந்தார்.

இதனால் அவர் அமெரிக்க சென்றடைந்தார். அப்பொழுது இந்த சம்பவம் குறித்து கடந்த செப்ட். 11 ஆம் தேதி “லூஸ் வுமன்” என்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதில் பேசிய அவர், கொரோனா வைரஸ், இயற்கையாக உருவாகவில்லை எனவும், அது வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதற்கான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும், விரைவில் அதனை வெளியிடப்போவதாக அந்த நேர்காணலில் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், கொரோனா தொடர்பாகவும், அதனை எதிர்கொள்ளுவது தொடர்பாக அவர் ஜனவரி முதல் ஆய்வுகளை மேற்கொண்டு வந்ததாகவும், அதனை அதிகாரிகளிடம் கொடுத்தேன். சீன அரசு மற்றும் உலக சுகாதாரத்துறை அமைச்சகம் இதுகுறித்து நல்ல முடிவினை எடுப்பார்கள் என நம்பினேன். ஆனால் சீன அரசுக்கு பயந்து கொண்டு யாரும் அதனை வெளியிட மறுப்பு தெரிவித்தனர். மேலும், உண்மையை மக்களுக்கு தெரியாமல் மறைக்க பார்க்கின்றதாக தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, வுஹான் ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் கண்டுபிடித்ததற்கான இரண்டு அறிக்கைகள் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார். முதலாவது அறிக்கை, ஒரு சில நாட்களில் வெளியிடப்போவதாக தெரிவித்த அவர், இது அறிவியல் சான்றுகளைப் பற்றி மக்களுக்கு எடுத்து சொல்லும் என அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும், வைரஸின் தோற்றத்தை அறிந்து கொள்வது முக்கியமான விஷயம். இல்லையென்றால் அது மக்களின் உயிருக்கு கூடம் ஆபத்தானதாக இருக்குமென தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

2 minutes ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

5 minutes ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

29 minutes ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

1 hour ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

2 hours ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

3 hours ago