கொரோனா வைரஸின் பாதிப்பு அமெரிக்காவில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதுவரை 48 லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா உருவாக்கிய சீனாவிலேயே 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தான் இதனால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் வல்லரசு நாடான அமெரிக்காவில் பாதிப்பின் எண்ணிக்கை மட்டும் 15 லட்சத்தை தாண்டி உள்ளது.
இதுவரை அமெரிக்காவில் 1,527,664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 90,978 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து அதிக அளவு பாதிப்பையும் உயிர் சேதத்தையும் கொண்ட நாடாக அமெரிக்கா கருதப்பட்டது.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து கொண்டே வருவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில் சில விதி விலக்குகளைத் தவிர அமெரிக்கா முழுவதும் வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சரியத் தொடங்கியுள்ளது. இது உண்மையாக நல்ல விஷயம் தான் எனக் கூறியுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…