கொரோனா வைரஸின் பாதிப்பு அமெரிக்காவில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதுவரை 48 லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா உருவாக்கிய சீனாவிலேயே 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தான் இதனால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் வல்லரசு நாடான அமெரிக்காவில் பாதிப்பின் எண்ணிக்கை மட்டும் 15 லட்சத்தை தாண்டி உள்ளது.
இதுவரை அமெரிக்காவில் 1,527,664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 90,978 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து அதிக அளவு பாதிப்பையும் உயிர் சேதத்தையும் கொண்ட நாடாக அமெரிக்கா கருதப்பட்டது.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து கொண்டே வருவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில் சில விதி விலக்குகளைத் தவிர அமெரிக்கா முழுவதும் வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சரியத் தொடங்கியுள்ளது. இது உண்மையாக நல்ல விஷயம் தான் எனக் கூறியுள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…