சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் சுமார் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்து தற்போது இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் 7,99,741 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38,721 பேர் பலியாகியுள்ளனர். 1,69,995 பேர் குணமடைந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இயல்பு நிலை திரும்பி வரும் சீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஒருவர் பலியாகியுள்ளார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,305 ஆக உயர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,518 அதிகரித்துள்ளது. 2,000க்கும் அதிகமானவர்கள் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனிடையே 76 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸிலிருந்து சீனா படிப்படியாக மீண்டு இயல்பு நிலைக்கு வந்துள்ளது. அங்கு தற்போது ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…