கொரோனா:
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் ,ஹூபே போன்ற பல நகரங்களில் பரவி உள்ளது. முதலில் இந்த வைரசால் 3 பேர் மட்டுமே பலியானதாக அதிகாரிகள் கூறினர்.பின்னர் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டு வருகிறது.
இன்றைய பலி எண்ணிக்கை:
இந்த கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சீனா அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.நேற்று மட்டும் 56 பேர் இறந்து உள்ளனர்.
நேற்றைய பாதிப்பு:
நேற்று மட்டும் சீனாவில் 2100- க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இது மத்திய சீன மாகாணத்தில் மொத்த 16000 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று பிலிப்பைன்ஸில் உள்ள ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தார்.சீனாவிற்கு வெளியே கொரோனா வைரஸால் இறந்த முதல் மரணம் இதுவாகும்.
சீனாவில் இருந்து வெளியேற்றம் :
இந்தியா உட்பட பல நாடுகளை சார்ந்த நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள ஹூபே மற்றும் வுஹானில் மாகாணங்களில் இருந்து வெளியேற்றியுள்ளன.
நேற்று காலை 9.45 மணிக்கு இரண்டாவது சிறப்பு விமானம் மூலம் 323 இந்தியர்கள் டெல்லி வந்தனர். இவர்களில் 7 பேர் மாலத்தீவை சேர்ந்தவர்கள் இவர்கள் அனைவருக்கும் பரிசோதனைக்கு நடத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…