கொரோனா:
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் ,ஹூபே போன்ற பல நகரங்களில் பரவி உள்ளது. முதலில் இந்த வைரசால் 3 பேர் மட்டுமே பலியானதாக அதிகாரிகள் கூறினர்.பின்னர் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டு வருகிறது.
இன்றைய பலி எண்ணிக்கை:
இந்த கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சீனா அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.நேற்று மட்டும் 56 பேர் இறந்து உள்ளனர்.
நேற்றைய பாதிப்பு:
நேற்று மட்டும் சீனாவில் 2100- க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இது மத்திய சீன மாகாணத்தில் மொத்த 16000 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று பிலிப்பைன்ஸில் உள்ள ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தார்.சீனாவிற்கு வெளியே கொரோனா வைரஸால் இறந்த முதல் மரணம் இதுவாகும்.
சீனாவில் இருந்து வெளியேற்றம் :
இந்தியா உட்பட பல நாடுகளை சார்ந்த நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள ஹூபே மற்றும் வுஹானில் மாகாணங்களில் இருந்து வெளியேற்றியுள்ளன.
நேற்று காலை 9.45 மணிக்கு இரண்டாவது சிறப்பு விமானம் மூலம் 323 இந்தியர்கள் டெல்லி வந்தனர். இவர்களில் 7 பேர் மாலத்தீவை சேர்ந்தவர்கள் இவர்கள் அனைவருக்கும் பரிசோதனைக்கு நடத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…