பிரிட்டனில் சில தினங்களுக்கு முன்பு பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் மகளிர் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட பின்னர் பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நாடின் டோரிஸ்க்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட பிறகு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து பரவிய “கோவிட் 19” எனப்படும் கொரோனா வைரஸ் உலக முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமே இந்த வைரசால் 3,158 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 4011 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆக இருந்தது. இன்று 60 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…